திருமந்திரம் – பாடல் 1770: ஏழாம் தந்திரம் – 6.

by Lifestyle Editor

ஞான லிங்கம் (உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்றுமாக இருக்கின்ற சதாசிவத்தை ஞான இலிங்கமாக உணர்வது)

எந்தை பரமனு மென்னம்மை கூட்டமு
முந்த வுரைத்து முறைசொல்லில் ஞானமாஞ்
சந்தித் திருந்த விடம்பெருங் கண்ணியை
யுந்தியின் மேல்வைத்து உகந்திருந் தானே.

விளக்கம்:

எமது தந்தையாகிய பரம்பொருளும், எமது தாயாகிய அனைத்து விதமான சக்திகளும் முழுவதுமாக தாம் உணர்ந்ததை எடுத்துச் சொல்லி தகுதியானவர்களுக்கு உணர்ந்து கொள்ளும் படி சொல்ல முடிந்தால் அதுவே உண்மை ஞானம் ஆகும். அப்படி உண்மை ஞானம் பெற்ற ஞானிகளுக்கு அழகிய பெரும் கண்களை உடைய இறைவி இறைவனோடு சந்தித்து இருக்கின்ற இடமாக பாடல் #1764 இல் உள்ளபடி நடுவாகிய நிலைக்கு மேல் வைத்து இருக்கும் போது அங்கே இறைவனும் விருப்பத்தோடு ஞான இலிங்கமாக இருப்பான்.

Related Posts

Leave a Comment