திருமந்திரம் – பாடல் 1584: ஆறாம் தந்திரம் – 1.

by Lifestyle Editor

சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

திருவாகிச் சித்தியு முத்தியுஞ் சீர்மை
யருளா தருளு மயக்கறு வாய்மை
பொருளாய வேதாந்த போதமு நாத
னுருவருளா விடிலோர வொண் ணாதே.

விளக்கம்:

அடியவரின் உள்ளிருக்கும் ஜோதியே தெய்வமாக வீற்றிருந்து அனைத்து சித்திகளையும் கொடுப்பதும் முக்தியாகிய விடுதலையையும் கொடுப்பதும் உள்ளிருந்து வழிகாட்டி இறைவனை அடைவதற்கான வழியில் செல்ல வைப்பதும் வெளிப்புறத்திலிருந்த அருளாமல் குருவாக தமக்கு உள்ளிருந்தே அருளி மாயையாகிய மயக்கத்தை அறுப்பதும் உண்மை பொருளாகிய வேதத்தின் எல்லையாகிய ஞானத்தை கொடுப்பதும் ஆகிய இவை அனைத்தும் இறைவனே சிவகுருவாக அடியவரின் உள்ளுக்குள் இருந்து அருளாமல் போனால், அடியவரால் தாமாகவே எப்போதும் ஆராய்ந்து அறிந்து கொள்ளவோ அல்லது பெற்றுக் கொள்ளவோ முடியாது.

Related Posts

Leave a Comment