மிட் வீக் எவிக்சனில் ஏற்பட்ட மாற்றம்..

by Lifestyle Editor

இதுவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா, விசித்திரா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

மேலும், கடந்த வாரம் பணப் பெட்டி டாஸ்க் நடந்தது. இதில் பூர்ணிமா ரவி 16 லட்ச ரூபாய் பணத்துடன் வெளியேறினார்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இறுதி வாரத்திற்கான டாஸ்க் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது.

இதன்படி, நேற்றைய தினம் மிட் வீக் எவிக்ஷன் இடம்பெற்றது. இதில் வீட்டிலுள்ள 6 போட்டியாளர்களும் பங்குபற்றினார்கள்.

அதாவது போட்டியாளர்கள் 6 அறைகளுக்குள் சென்றுவிட்டு கதவுகளை திறக்க முயற்சிக்க வேண்டும். அப்படி திறக்கும் போது யாருடைய கதவு திறக்கவில்லையோ அவர் தான் வெளியேற போகிறார் என பிக்பாஸால் கூறப்பட்டது.

அந்த வகையில் நேற்றைய தினம் குறைவான வாக்குகள் பெற்றிருந்த விஜய் வர்மா வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் அவர் இல்லாவிட்டால் மாயா வெளியேறியிருப்பார் என்றும் தகவல்கள் பகிரப்படுகிறது.

Related Posts

Leave a Comment