செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பிரித்தானிய தேர்தலில் தாக்கத்தை செலுத்தலாம் என எச்சரிக்கை…

by Lifestyle Editor

உலகெங்கிலும் நடைபெறும் தேர்தல்களை சீர்குலைக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் அது குறித்து பிரித்தானியாவின் மூத்த அரசியல்வாதிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பிரித்தானியாவின் ஜனநாயகத்திற்கு தெளிவான மற்றும் தற்போதைய ஆபத்தாக கருதும் இந்த விடயத்தை சமாளிக்க இன்னும் அதிகளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் நீதித்துறை செயலாளர் Sir Robert Buckland வலியுறுத்தியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவில் உருவாக்கிய தவறான தகவல்களால் ஜனநாயகத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல் எதிர்காலத்தைப் பற்றிய கவலையை ஏற்படுத்தும் என முன்னாள் நீதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் 2025 ஜனவரிக்குள் நடக்க வேண்டிய அடுத்த பொதுத் தேர்தல், 2017ல் காணப்பட்ட இடையூறுகளை எதிர்கொள்ளக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் பணிக்குழு மூலம், வெளிநாட்டு தலையீட்டிலிருந்து தேர்தலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment