பொங்கல் விடுமுறைக்கு டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!

by Lifestyle Editor

தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை போன்ற விடுமுறை தினங்களில் தமிழக அரசின் போக்குவரத்து துறை சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது என்பது தெரிந்ததே.

அந்த வகையில் அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை அடுத்து தொடர் விடுமுறை கிடைக்கும் என்பதால் சென்னையில் உள்ள தென் மாவட்ட மக்கள் சொந்த ஊர் செல்வார்கள்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கான அரசு பேருந்துகளில் முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. ஜனவரி 14ஆம் தேதி போகி பண்டிகை முதல் 17ஆம் தேதி வரை பொங்கல் பண்டிகை கொண்டாட இருப்பதை அடுத்து இந்த தேதிகளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாகவும் இந்த முன்பதிவை நேரில் அல்லது இணையதளம் அல்லது செயலியில் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் இந்த முன்பதிவு வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related Posts

Leave a Comment