தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன பகீர் தகவல்..!

by Lifestyle Editor

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவை போன்று இயற்கை எழிலுக்கு பெயர் போனது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி அருகேயுள்ள கிளாமலை பகுதியில் நேற்று பயங்கர வெயில் சுட்டெரித்தது. அப்போது அங்குள்ள மேற்குதொடர்ச்சி மலையின் ஒரு பகுதி திடீரென வெடித்து சிதறியது.

இதில் பாறைகளும் சிதறின. அந்த பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சியளித்தது. இதுதொடர்பான வீடியோவும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மலைப்பகுதியில் திடீரென வெடிப்பு ஏற்பட்டதற்கான காரணம் என்ன என வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார்.அதில் ஒவ்வொரு மலையும் மழைக்கு மிகவும் முக்கியமானது.. ( மலைகள் காற்றை உயர்த்துகின்றன) ஆம் வளர்ச்சியும் முக்கியம்தான்.. நாம் அனைவரும் நல்ல சாலைகளில் வாகனங்களை இயக்க விரும்புகிறோம். ஆனால் வேறு மாற்று இருக்க முடியாதா? குவாரிகளுக்காக மலைகள் இடிக்கப்படுவதைப் பார்க்க வேதனையாக உள்ளது. இதனால் மழை பொழிவு குறையும்.. என தெரிவித்துள்ளார்.

மேலும் மற்றொரு பதிவில், நாம் எதையும் மீண்டும் உருவாக்க முடியும், ஆனால் ஒரு மலையை மீண்டும் உருவாக்க முடியாது. ஒருமுறை இழந்தால், அது என்றென்றும் இழந்ததுதான் என்றும் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வெதர்மேனின் இந்த பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திங்கள் கிழமை இந்திய புவி அறிவியல் ஆய்வுகளுக்கான தேசிய மைய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்த பிறகே மலை வெடிப்புக்கான காரணம் குறித்து தெரியவரும்.

Related Posts

Leave a Comment