சைக்கிளில் சென்று அதிரடியாக ஆய்வு நடத்திய ஆட்சியர் – குவியும் பாராட்டு

by Column Editor

நேற்று முழு ஊரடங்கு அமலில் இருந்தது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளர் கவிதா ராமு நேற்று காலை புதுக்கோட்டை நகரில் உள்ள முக்கிய பகுதிகளுக்கு சைக்கிளிலேயே பயணம் செய்து ஆய்வை மேற்கொண்டார்.

தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனையடுத்து, தமிழகம் முழுவது, இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தவகையில், நேற்று முழு ஊரடங்கு அமலில் இருந்தது.

நேற்று காலை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளர் கவிதா ராமு நகரில் உள்ள முக்கிய பகுதிகளுக்கு சைக்கிளிலேயே பயணம் செய்து தனியாக ஆய்வுகளை மேற்கொண்டார்.

அப்போது, சாலையில் முகக் கவசம் அணியாமல் சென்ற இளைஞர்களுக்கு அறிவுரை கூறி வீட்டை விட்டு வெளியேறும் போது முகக்கவசம் அணியுங்கள். உங்கள் பாதுகாப்புக்கு அது நல்லது என்று அறிவுரை வழங்கினார். மாவட்ட ஆட்சியரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Related Posts

Leave a Comment