கிரிக்கெட்டில் புதிய நடைமுறை: இனி இப்படி செய்தால் 5 ரன்கள் போனஸ்.!

by Lifestyle Editor

கிரிக்கெட் போட்டி தற்போது சர்வதேச அளவிலான வரவேற்பு பெற்றுள்ள நிலையில், 2026 ஒலிம்பிக்கிலும் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப கிரிக்கெட்டில் பல்வேறு விதிமுறைகளும் சேர்க்கப்பட்டு, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன.

இந்நிலையில் கிரிக்கெட்டில் ஒரு ஓவர் முடிந்து அடுத்து ஓவர் முதல் பந்து 60 வினாடிகளுக்குள் வீசப்பட வேண்டும் என்ற புதிய நடைமுறையானது அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த ஓவரில் முதல் பந்து 60 வினாடிகளுக்குள் வீசப்படாத பட்சத்தில், இரண்டு முறை அம்பையர் தனது எச்சரிக்கை வழங்குவார். மூன்றாவது முறை இதே நிலை தொடர்ந்தால் எதிரணிக்கு ஐந்து ரன்கள் கூடுதலாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment