இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடக்கிறது!

by Column Editor

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரை அடுத்து இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் கடந்த 23ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ருத்ராஜ் கெய்க்வாட் துணை கேப்டனாக செயல்பட்டு வருகிறார். சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங் உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி கடந்த 23ம் தேதி நடைபெற்ற நிலையில், இதில் இந்திய 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ள ஆஸ்திரேலிய அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்று பதிலடி கொடுக்க தீவிரம் காட்டி வருகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இன்றைய போட்டியிலும் வெற்றி பெற முனைப்பு காட்டி வருகிறது.

Related Posts

Leave a Comment