அடுத்த ரெட் கார்ட்டிற்கு தயாரான போட்டியாளர் ..

by Lifestyle Editor

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் பிக்பாஸ்.

இந்த நிகழ்ச்சி தன்னுடைய ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக முடித்து விட்டு தற்போது ஏழாவது சீசனில் உள்நுழைந்துள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியின் முக்கிய பிரபலங்கள், சீரியல் பிரபலங்கள், மீடியா பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அத்துடன் பிக்பாஸ் வீட்டிற்குள் சாதிக்க வேண்டும் என நினைத்து உள்நுழைந்தவர்கள் குரூப்பாக சேர்ந்து சண்டை பிடித்து கொள்கிறார்கள்.

கடந்த வாரம் ரெட் கார்ட் கொடுத்து பிரதீப் வெளியே அனுப்பட்டார். இதற்காக ஜோவிகா உட்பட பெண் போட்டியாளர்கள் அனைவரும், “பிரதீப் இருப்பதால் எங்களுக்கு பயமாக இருக்கின்றது..” என பேசியிருந்தார்கள்.

ஆனால் விசித்திரா, அர்ச்சனா மற்றும் தினேஷ் ஆகிய மூவரும் பிரதீப்பின் எதிர்காலம் குறித்து நியாயமாக பேசுகிறார்கள். இதற்காக முழு பிக்பாஸ் வீடும் எதிர்க்கின்றது.

இந்த நிலையில் நிக்ஷன் காதல் வலையில் விழுந்த ஐசு,“ அவ்வளவு பிரச்சினையாக இருந்தால் தினேஷ் நேற்று தூக்கி காட்டியிருக்கலாம் தானே..” என கொச்சையாக பேசுகிறார்.

இதற்கு சார்பாக பேசிய ஜோவிகா “ அவர் ஆம்பளையா இல்லையா?” என வயதிற்கு ஏற்கதகாதவற்றையெல்லாம் பேசியுள்ளார். ஜோவிகாவிற்கு வெளியில் சர்போர்ட் இருக்கின்ற காரணத்தால் ரொம்ப ஆடுகிறார் போல் இருக்கின்றது.

வயதிற்கு மரியாதை கொடுக்காமல் இருக்கின்றார் போல் இருக்கின்றது. வனிதா போல் அசிங்கபடுவார் என ரசிகர்கள் கொந்தளித்து வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து கமல், பிக்பாஸ் இரண்டையும் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகின்றார்கள்.

Related Posts

Leave a Comment