அகதிமுகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் ..

by Lifestyle Editor

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் 26 ஆவது நாளாகவும் நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் ஜபாலியா அகதிமுகாம்; மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அதிகளவில் பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

120 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என இந்தோனேசிய மருத்துவமனையின் சத்திரகிசிச்சை இயக்குநர் முகமட் எல் ரொன் தெரிவித்துள்ளார்.

பெண்களும் குழந்தைகளுமே அதிகளவில் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அவர் காயமடைந்த பெருமளவானவர்கள் சிகிச்சை பெறுவதை காண்பிக்கும் படங்களை வெளியிட்டுள்ளார்.

கடும் காயமடைந்தவர்களிற்கு மேலதிக சத்திரகிசிச்சையை வழங்கவேண்டியிருந்ததால் தாக்குதல்களிற்கு மத்தியில் காசாவின் அன்ஸிபா மருத்துவமனைக்கு அனுப்பவேண்டிய நிலையேற்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்

Related Posts

Leave a Comment