நியூகாஸில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தவர்கள் மீது மோதிய கார் : 19 வயதுடைய இளைஞர் உயிரிழப்பு

by Lankan Editor

நியூகாஸில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பலர் மீது கார் மோதிய சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு மேற்கு டென்டன் பகுதியில், இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் இதில் 19 வயதுடைய ஒருவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை குறித்த பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மேலும் இரண்டு பெண்கள் காயமடைந்த நிலையில்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் 24 வயதுடைய ஒருவர் மற்றும் 21 வயதுடைய இருவர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Related Posts

Leave a Comment