யாழ்- நாவற்குழி பகுதியில் பெண் படுகொலை! கணவர் கைது

by Lankan Editor

யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் பெண் ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது கணவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் நாவற்குழி ஐயனார் கோயிலடியில் வசிக்கும் அஜந்தன் யமுனா எனும் 23 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் எனத்  தெரியவந்துள்ளது.

குறித்த நபர் மனைவியைக்  கொலை செய்து விட்டு  தப்பிச் செல்ல முற்பட்ட வேளையிலேயே பொலிஸாரினால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில்  குறித்த நபர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில்”தனது மனைவியின் மீது கொண்ட ஆத்திரத்திலேயே அவரைக் கடுமையாகத் தாக்கியதாகவும், ஆனால் அவர் உயிரிழந்தமை தனக்குத் தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment