தீ விபத்து : லூடன் விமான நிலையத்தில் சேவைகள் நிறுத்தம்

by Lankan Editor

கார் நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து லுடன் விமான நிலையத்தின் ஊடான அனைத்து விமான சேவைகளும் மதியம் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பல மாடியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கட்டிடம் குறிப்பிடத்தக்க கட்டமைப்பு சரிவை சந்தித்த நிலையில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

சுமார் 1,500 வாகனங்கள் கார் நிறுத்துமிடத்தில் இருந்ததாகவும், அவற்றில் பல சேதமடைந்ததாகவும் தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.

இதில் காயமடைந்த நான்கு தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஒரு விமான நிலைய ஊழியர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment