காயம் காரணமாக கே.எல்.ராகுல் விலகல் – லக்னோ அணியில் இணைந்த முக்கிய வீரர் ..

by Lifestyle Editor

காயம் காரணமாக லக்னோ அணியில் இருந்து கே.எல்.ராகுல் விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக முக்கிய வீரர் ஒருவர் லக்னோ அணியில் இருந்து விலகியுள்ளார்.

கடந்த மே 01ம் தேதி லக்னோ மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனிடையே பீல்டிங்கின் போது லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் காரணமாக ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டத்தில் ராகுல் விளையாடுவதில் சந்தேகம் தான் என கூறப்பட்டது. இதன் காரணமாக அவர் கடந்த 03ம் தேதி சென்னை அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக லக்னோ அணியின் கேப்டனாக குருனால் பாண்டியா செயல்பட்டார். அந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. காயம் காரணமாக லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இதேபோல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இருந்தும் கே.எல்.ராகுல் விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்நிலையில், லக்னோ அணியில் கே.எல்.ராகுலுக்கு மாற்று வீரராக இந்தியாவின் கருண் நாயர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கருண் நாயர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது. கே.எல்.ராகுலுக்கு பதிலாக கருண் நாயர் லக்னோ அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment