அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு …

by Lifestyle Editor

கிழக்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள வேகமாறுபாடு காரணமாக தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் இன்று ( 10-ம் தேதி) இடி,மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று ஏற்கனவே வானிலை மையம் அறிவித்திருந்தது. அத்துடன் 11, 12-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவக் கூடும் என்றும் கூறியிருந்தது.

இன்று அடுத்த 3 மணி நேரத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment