திருமந்திரம் – பாடல்1692 : ஆறாம் தந்திரம் – 14.

by Lifestyle Editor

பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)

பதைக்கின்ற போதே பரமென்னும் வித்தை
விதைக்கின்ற வித்தினை மேனின்று நோக்கிச்
சிதைக்கின்ற சிந்தையைச் செவ்வே நிறுத்தி
யிசைக்கின்ற வன்பருக் கீயலு மாமே.

விளக்கம்:

இறைவனை அடைய வேண்டும் என்று துடிதுடிக்கின்ற போதே பரம்பொருள் என்று அறியப்படும் அனைத்திற்கும் மூல விதையான இறைவன் அடியவருக்குள் விதைக்கின்ற மாயை நீங்கி உணரக்கூடிய இறை சக்தியை குருவின் அருளால் தலை உச்சிக்கு மேல் மூச்சுக்காற்றை எடுத்துச் சென்று அங்கே வீற்றிருக்கும் இறை சக்தியை தரிசித்து இறைவனை அடைவதற்கு தடையாக வேறு வழிகளில் சிதைந்து போகின்ற சிந்தனைகளை சீர்படுத்தி அவற்றை இறைவன் மேல் மட்டும் எப்போதும் இருக்கும் படி நிறுத்தி இறைவனோடு எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற பக்குவமுள்ள அன்பர்களுக்கு இறைவன் தமது அருளை கொடுத்து அருளுவான்.

Related Posts

Leave a Comment