ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை …

by Lifestyle Editor

16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 31ம் தேதி தொடங்கியது. இதுவரை 7 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 8வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. கவுகாத்தில் மைதானத்தில் இன்று இரவு நடைபெறவுள்ள 8வது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ராஜஸ்தான் அணியை பொறுத்தவரையில் தனது முதல் போட்டியில் ஐதராபாத் அணியை பந்தாடியது. இதன் மூலம் முதல் வெற்றியை பெற்றதோடு புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதேபோல் பஞ்சாப் அணியை பொறுத்தவரையில் அந்த அணி தனது முதல் போட்டியில் கொல்கத்தா அணியுடன் மோதியது. அந்த போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், இந்த இரு அணிகளும் இன்று இரவு கவுகாத்தில் மைதானத்தில் நடைபெறவுள்ள இன்றைய போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Related Posts

Leave a Comment