கேழ்வரகு – காய்கறி சூப்

by Lifestyle Editor

தேவையான பொருட்கள்

கேழ்வரகு மாவு – 3 ஸ்பூன்,
தண்ணீர் – 4 கப்,
கேரட் – 1
பசலை கீரை – அரை கப்
பச்சை பட்டாணி – கால் கப்
காலிஃப்ளவர் – சிறிதளவு
துருவிய கோஸ் – கால் கப்
பொடியாக நறுக்கிய பூண்டு – 1 டீஸ்பூன்
சோயா பீன்ஸ் – கால் கப்
பீன்ஸ் – கால் கப்
எலுமிச்சை பழம் – பாதி உப்பு – தேவைக்கு
மிளகு தூள் – தேவைக்கு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
நெய் – 1 ஸ்பூன்

செய்முறை

* கடாயில் நெய் ஊற்றி சூடானதும் கேழ்வரகு மாவை போட்டு வறுத்து கொள்ளவும்.
* பீன்ஸ், கேரட், பசலைக்கீரை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* காலிஃப்ளவரை சிறிய பூக்களாக உதிர்த்து வைக்கவும்.
* கேழ்வரகு மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் நெய், பீன்ஸ், கேரட், பசலைக்கீரை, காலிஃப்ளவர், சோயா பீன்ஸ், துருவிய கோஸ், பச்சை பட்டாணி, உப்பு சேர்த்து மிதமான தீயில் 12 நிமிடம் கொதிக்க விடவும்.
* அடுத்து அதில் நறுக்கிய பூண்டை சேர்த்து கொதிக்கவிடவும்.
* கரைத்த வைத்த கேழ்வரகு கரைசலை ஊற்றி(கட்டி விழக்கூடாது) நன்றாக கலக்கி விடவும். அதை 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
* அடுத்து அதில் மிளகுத்தூள், கொத்தமல்லி தழை, எலுமிச்சை சாறு சேர்த்து 1 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.
* இப்போது சூப்பரான கேழ்வரகு – காய்கறி சூப் ரெடி.
* விருப்பான எல்லா காய்கறிகளையும் இதில் சேர்த்து கொள்ளலாம்.

Related Posts

Leave a Comment