குக் வித் கோமாளியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்.. கண் கலங்கிய புகழ், சுனிதா

by Lifestyle Editor

குக் வித் கோமாளி 4

குக் வித் கோமாளி சீசன் 4 தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே நடந்த எலிமினேஷன் சுற்றுகளில் கிஷோர் ராஜ்குமார், காளையன் வெளியேறியுள்ளனர்.

இதை தொடர்ந்து இந்த வாரம் நடைபெற்ற எலிமினேஷன் சுற்றில் குறைந்த மதிப்பெண்களுடன் ஷெரின் மற்றும் ராஜ் அய்யப்பா இருவரும் இறுதி கட்டத்தில் இருந்தனர்.

வெளியேறிய போட்டியாளர்

இதில் ஷெரினை விட சற்று குறைவான மதிப்பெண்களை பெற்றதால் ராஜ் அய்யப்பா இந்த வாரம் குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறியுள்ளார்.

ராஜ் அய்யப்பா எலிமினேட் என நடுவர்கள் கூறியவுடன், புகழ், சுனிதா மற்றும் சில கண்கலங்கினார்கள். அதே குக் வித் கோமாளி மூலம் தனக்கு கிடைத்த விஷயங்கள் குறித்தும் ராஜ் அய்யப்பா பகிர்ந்துகொண்டார்.

மீண்டும் வைல்ட் கார்ட் சுற்றில் அனைவரையும் சந்திக்கிறேன் என கூறிவிட்டு விடைபெற்று சென்றார் ராஜ் அய்யப்பா.

Related Posts

Leave a Comment