பிரான்ஸ் வேலைநிறுத்த நடவடிக்கை: டோவர்- கலேஸ் இடையேயான படகுகள் சேவைக்கு இடையூறு ..

by Lifestyle Editor

பிரான்ஸில் நடக்கும் தேசிய வேலைநிறுத்தத்தால் டோவர் மற்றும் கலேஸ் இடையேயான படகுகள் சேவை தடைபடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் துறைமுகத்திற்கு மற்றும் அங்கிருந்து வரும் சேவைகள் 07:00 மணி முதல் ஒன்பது மணி நேரம் நிறுத்தப்படும் என பிஅண்ட்ஓ ஃபெரிஸ் கூறியுள்ளது.

டங்கர்கியூ சேவைகள் வழக்கம் போல் இயங்குவதால் டோவர் இன்னும் திறந்திருக்கும், ஆனால் பயணங்களுக்கு கூடுதல் நேரத்தை அனுமதிக்குமாறு பயணிகள் வலியுறுத்தப்படுகிறார்கள்.

உத்தியோகபூர்வ ஓய்வூதிய வயதை உயர்த்தும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் முழுவதும் இன்று (வியாழக்கிழமை) ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த தேசிய நிறுத்தங்களில் போக்குவரத்து, பாடசாலை மற்றும் சுகாதார பணியாளர்கள் ஈடுபடுவார்கள்.

பிஅண்ட்ஓ, சேவைகளுக்கு ஏற்படும் இடையூறுகளின் அளவை எதிர்பார்க்க முடியாது என்றும் பகலில் பரந்த செயல்பாடுகள் பாதிக்கப்படலாம் என்றும் கூறியது.

வேலைநிறுத்த நடவடிக்கை 16:00 மணிக்கு முடிந்த பிறகு படகுகள் சேவை மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Posts

Leave a Comment