திருமந்திரம் – பாடல் 1621 : ஆறாம் தந்திரம் – 4

by Lifestyle Editor

துறவு (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை)

நாகமு மொன்று படமைந்தி னாலது
போகமாழ் புற்றிற் பொருந்தி நிறைந்தது
வாக மிரண்டும் படம்விரித் தாட்டொழிந்
தேக படஞ்செய் துடம்பிட லாமே.

விளக்கம் :

உயிர்களின் உடல் ஒன்று அதன் உணர்வுகள் பார்த்தல் கேட்டல் சுவைத்தல் மணத்தல் உணர்தல் ஆகிய ஐந்து விதமான புலன்களால் கட்டி இழுக்கப்பட்டு அதன் மூலம் உடல் அனுபவிக்கின்ற இன்பத்திலேயே ஆழ்ந்து ஆசைகளாகிய புற்றில் பொருந்தி அதிலேயே வாழ்க்கை முழுவதும் நிறைந்து இருக்கின்றது. அதனால் தூல உடல் சூட்சும மனம் ஆகிய இரண்டும் தமது ஆசைகளின் வழியே படம் விரித்து ஆடுகின்ற பாம்பைப் போல ஆடி வாழ்க்கை ஒழிந்து போகின்றது. இதை மாற்ற ஐந்து புலன்களையும் ஒரே உடலாகிய மனம் அடக்கி ஆளும் படி செய்து அதை தமது உடலின் கட்டுப் பாட்டில் வைத்து தியானத்தில் வீற்றிருக்கலாம். இந்த நிலையே துறவு ஆகும்.

Related Posts

Leave a Comment