பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தம்.. சென்செக்ஸ் 17 புள்ளிகள் குறைந்தது…

by Lifestyle Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் மந்தமாக இருந்தது. சென்செக்ஸ் 17 புள்ளிகள் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. பின்னர் பங்கு வர்த்தகத்தில் ஏற்றம் கண்டாலும் அது நீண்ட நேரம் நிலைக்கவில்லை. கச்சா எண்ணெய் விலை உயர்வு, சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் நிலையில்லாமல் இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டைட்டன் மற்றும் மகிந்திரா அண்ட் மகிந்திரா உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பார்தி ஏர்டெல் மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்பட மொத்தம் 18 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,077 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,401 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 151 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.281.04 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று ஒட்டு மொத்த அளவில் ரூ.60 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 17.15 புள்ளிகள் குறைந்து 60,910.28 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 9.80 புள்ளிகள் சரிவு கண்டு 18,122.50 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment