மீண்டும் 3 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் …

by Lifestyle Editor

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் மேலும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

ஏற்கனவே இன்று கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையை பொறுத்தவரை இலேசான மழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

Related Posts

Leave a Comment