அம்பேவெல பண்ணைக்கு 30 ஏக்கர் காணி : ஜனாதிபதி பணிப்பு !

by Lifestyle Editor

அம்பேவெல பண்ணைக்கு அருகில் கைவிடப்பட்ட 30 ஏக்கர் காணியை உடனடியாக பண்ணைக்கு வழங்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் மற்றும் மாநகர ஆணையாளருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த காணியை மேய்ச்சல் நிலமாக அபிவிருத்தி செய்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து கறவை மாடுகளின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய பயன்படுத்துமாறு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அம்பேவெல பண்ணைக்கு விஜயம் செய்த பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.

Related Posts

Leave a Comment