மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற சுனாமி பேரழிவின்18வது ஆண்டு நிகழ்வு ..!

by Lifestyle Editor

சுனாமி காவுகொண்ட 18வது ஆண்டு நினைவு நாடெங்கிலும் இன்று காலை உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

அந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்தம் காரணமாக 2800க்கும் மேற்பட்டவர்கள் காவுகொள்ளப்பட்ட நிலையில் நினைவுகூரும் வகையில் நிகழ்வுகள் நடைபெற்றன.

இதற்கமைய மட்டக்களப்பு –அம்பாறை மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் விசேட பூஜைகள் நடாத்தப்பட்டதுடன் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது உயிர்நீர்த்தவர்களின் புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன் உயிர்நீர்த்தவர்களின் உறவினர்கள் உறவுகளின் புகைப்படங்களுக்கு மலர் தூவி கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்கள்.

குறித்த அஞ்சலி நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன்,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம்,பிரசன்னா இந்திரகுமார்,பிரசாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Related Posts

Leave a Comment