நாடு திரும்பிய ஹனா சிங்கர் ஜனாதிபதியை சந்தித்தார்..

by Lifestyle Editor

ஐ.நா. வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர், தனது சேவையை முடித்துக்கொண்டு இன்று (19) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.

ஹனா சிங்கருடன் சிநேகபூர்வமாக உரையாடிய ஜனாதிபதி, இலங்கைக்காக அவர் ஆற்றிய சேவைகளுக்கு நன்றி தெரிவித்ததுடன், அவரது எதிர்கால பணிகளுக்காக வாழ்த்தும் தெரிவித்தார்.

2018 செப்டம்பர் 07 ஆம் திகதி முதல் இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட இணைப்பாளராக ஹனா சிங்கர் செயற்பட்டார்.

Related Posts

Leave a Comment