பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து வெளியேறிய பின் ஜனனி போட்ட பதிவு ..

by Lifestyle Editor

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 6வது சீசன் படு வெற்றிகரமாக ஓடுகிறது. அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இ,ந்நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாக ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேறி வருகிறார்.

கடந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்றவர்களில் ஜனனி, ஏடிகே கடைசியில் இருந்தார்கள். ஆனால் ஏடிகே தான் வெளியேறுவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்க கடைசியில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ஜனனி வெளியேறினார்.

ஜனனி வீட்டைவிட்டு வெளியேறியது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது.

பிக்பாஸ் 6வது சீசன் வீட்டில் இருந்து வெளியேறிய ஜனனி முதன்முறையாக தனது இன்ஸ்டாவில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் அவர், தனக்கு வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment