ஆங்கில கால்வாயில் உயிர்நீத்த 31 பேரின் ஓராண்டு நினைவஞ்சலி !

by Lifestyle Editor

ஆங்கில கால்வாயில் உயிர்நீத்த 31 பேரின் ஓராண்டு நினைவஞ்சலி இன்று (வியாழக்கிழமை) நினைவுக்கூரப்படவுள்ளது.

கடந்த ஆண்டு இதே நாளில், பிரான்ஸில் இருந்து பிரித்தானியாவுக்கு ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள முயன்ற 34 பேருடன் பயணித்த படகு, கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.

இதில், டோவர் ஜலசந்தியில் இதுவரை இல்லாத மிக மோசமான புலம்பெயர்ந்தோர் பேரழிவதாக கருதப்படும் இந்த விபத்தில், கருவில் இருந்த குழந்தை உட்பட 31 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் அரங்கேறி அடுத்த நாட்களில் பொதுமக்களின் கூக்குரல் எழுந்தது மற்றும் இரு தரப்பிலிருந்தும் அரசியல்வாதிகள் மக்கள் கடத்தல்காரர்களைக் கண்டித்து தீர்வுகளைக் கோரினர்.

ஆனால், அந்த 31 பேர் நீரில் மூழ்கி 365 நாட்களில், கிட்டத்தட்ட 44,000 பேர் ஆபத்தான படகு பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, இந்த தவிர்க்கக்கூடிய மரணங்களிலிருந்து அரசாங்கம் எதுவும் கற்றுக் கொள்ளவில்லை என சோகத்தின் ஓராண்டு ஆண்டு நினைவு நாளில் தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அகதிகள் தொண்டு நிறுவனமான Care4Calais ஏற்பாடு செய்திருந்த, இறந்தவர்களுக்கான விழிப்புணர்வு இன்று மாலை நாடாளுமன்ற சதுக்கத்தில் நடைபெறும். மற்றொன்று பிரான்சின் டன்கிர்க்கில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கொடூரமான சம்பவத்தின் போது பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய அவசர சேவைகள் பரஸ்பரம் பொறுப்பேற்றுக் கொண்டதாக சோகம் பற்றிய ஆரம்ப அறிக்கை கூறுகிறது.

Related Posts

Leave a Comment