அரண்மனை டாஸ்கில் சொதப்பிய ராபர்ட் – ரக்ஷிதா..!

by Lifestyle Editor

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களுக்கு மிகவும் வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த டாஸ்கில் முழு ஈடுபாடுடன் போட்டியாளர்கள் விளையாட வேண்டும். அப்படி விளையாடாத இருவரை சக போட்டியாளர்கள் தேர்வு செய்து, ஜெயிலுக்கு அனுப்பும் வழக்கம் இருந்து வருகிறது.

அந்த வகையில், ராஜா ராணி டாஸ்கில்… தன்னை நெருங்கி நெருங்கி வந்த ராபர்ட் மாஸ்டரை, திட்டவும் முடியாமல், கோபத்தை வெளிப்படுத்தவும் முடியாமல் இருந்த ரக்ஷிதா, சரியாக கேமில் கவனம் செலுத்தாமல் இருந்தார். இன்று ராபர்ட் மாஸ்டர் மீது அவர் தன்னுடைய கோபத்தை காட்டியதும், அவர் அழுத காட்சிகளும் புரோமோவில் வெளியானதையும் பார்க்க முடிந்தது.

ராபர்ட் – ரக்ஷிதா இருவருமே, மிகவும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று பர்ஃபாம் செய்த போதிலும், அவர்கள் அதனை சிறப்பாக செய்யவில்லை என, சக போட்டியாளர்கள் பெரும்பாலானோர் இவர்கள் இருவரின் பெயர்களை மட்டுமே கூறுகிறார்கள். இதனை ஏற்று கொண்டு, இவர்கள் இருவரும் தற்போது ஜெயிலுக்கும் ஒன்றாக சென்ற காட்சிகள் அன்சீன் புரோமோ மூலம் வெளியாகி அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஏற்கனவே ரஷிதா மீது, ராபர்ட் மாஸ்டர் கோபமாக இருந்த நிலையில்… இருவரும் ஒன்றாகவே ஜெயிலுக்கும் சென்றுள்ளதால்… இவர்கள் கோபம் தணிந்து பேசிக்கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts

Leave a Comment