குரூப் 2, குரூப் 2A தேர்வு எப்போது? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!!

by Column Editor

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, குரூப் 2A தேர்வுகளுக்கான தேதி இன்று வெளியாகிறது.

அரசு காலி பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தி அதன் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர் அந்தவகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான வருடாந்திர திட்டம் கடந்த நவம்பரில் வெளியிடப்பட்டது அதில் பிப்ரவரியில் குரூப் 2 குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு இன்று வெளியாகிறது. 5,831 காலி பணியிடங்களுக்கான குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பு இன்று பிற்பகல் 12.30 மணிக்கு வெளியாகும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது. அறிவிப்பு வெளியான 75 நாட்களில் தேர்வு நடத்தப்படும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது .அப்படி பார்க்கையில் இன்றிலிருந்து 25 நாட்கள் என்ற கணக்கில் வரும் மே மாதத்தில் தேர்வு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.டிஎன்பிஎஸ்சி சார்பில் 32 வகையான தேர்வுகளை இந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2 ,குரூப் 4 என இந்த தேர்வுகள் நடத்தப்படவுள்ளது.

Related Posts

Leave a Comment