பிக்பாஸ் சீசன் 5 ‘கிராண்ட் ஃபினாலே’.. பிரம்மாண்ட நிகழ்ச்சியின் ப்ரோமோ !

by Lifestyle Editor

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

கடந்த சீசன்களை போன்று பிக்பாஸ் 5வது சீசனும் கோலாகலமாக தொடங்கியது. கொரானா பரவல் காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கிய நிலையில் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. அத்துடன் இரண்டு பேர் வைல்டு கார்டு என்ட்ரியில் வந்தனர். ஒவ்வொரு வாரமும் பொதுமக்கள் அளிக்கும் வாக்குகள் எண்ணிக்கையில் போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டு வந்தனர்.

தற்போது 5 போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் யார் வெற்றிப்பெற போகிறார் என்ற எதிர்பார்ப்பு இன்று மாலை 6.30 மணிக்கு கிராண்ட் ஃபினாலே நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி யார் பிக்பாஸ் 5வது சீசனின் வின்னர் என்று தெரிந்துவிடும். அதனால் இந்த நிகழ்ச்சியை பார்க்க ஆர்முடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இன்றைய தினத்தின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் போட்டியாளர்கள் 5 பேரும் உற்சாகமாக இருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த காட்சிகளின் பின்னணயில் கமலும் பேசுகிறார். எதிர்பாராத திருப்பங்களுடன் ஒரு நீண்ட பயணம். அதன் உச்சக்கட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. உங்கள் ஒவ்வொருவருக்கும் மனம் கவர்ந்த போட்டியாளர் என்று ஒருவர் இருந்திருப்பார். ஒட்டுமொத்த தீர்ப்பில் அவருக்கு இடம் இருக்குமா என்று பார்க்கலாம் என்று அந்த ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.

Related Posts

Leave a Comment