மட்டன் பிரியாணி

by Column Editor

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் பிரியாணியை செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

மட்டன் – 1 கிலோ
அரிசி – 1 கிலோ
எண்ணெய் – 100 கிராம்
நெய் – 150 கிராம்
பட்டை – 2 துண்டு
கிராம்பு – ஐந்து
ஏலக்காய் – முன்று
வெங்காயம் – 1/2 கிலோ
தக்காளி – 1/2 கிலோ
இஞ்சி, பூண்டு விழுது
கொ. மல்லி – 1 கட்டு
புதினா – 1 கட்டு
மிளகாய் – 8
தயிர் – 225 கிராம்
சிகப்பு மிளகாய் தூள் – 3 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிறிதளவு
எலுமிச்சை பழம் – 1

செய்முறை:

* முதலில் சட்டி காய்ந்ததும் எண்ணெயும் நெய்யையும் ஊற்றி நன்கு காய்ந்ததும் பட்டை , கிராம்பு, ஏலக்காய் போட்டு வெடித்ததும் வெட்டிய வெங்காயம் அனைத்தும் போட்டு நன்றாக கிளறி மூடி விடவும்.

* பொன் முறுவல் ஆனதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக கிளறி விடவும். ஒவ்வொரு தடவை கிளறும் போதும் மூடி போட்டு மூடியே தான் வைக்க வேண்டும். அடுப்பை சிம்மில் வைக்கவேண்டும்.

* பிறகு கொத்தமல்லி புதினாவை போட்டு கிளறவும்

* பின்னர் தக்காளி, ப.மிளகாய் போடவும். இரண்டு நிமிடம் கழித்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு போட்டு வேக விடவும். எண்ணெயில் எல்லா பொருட்களும் நன்கு வதங்கியவுடன் மட்டனை போடவும்.

* மட்டனை போட்டு தீயை அதிகபடுத்தி நன்றாக ஐந்து நிமிடம் கிளறவும்.

* பிறகு தயிரை நன்கு ஸ்பூனால் அடித்து ஊற்றவும். அப்படியே சிம்மில் வைத்து 20 நிமிடம் வேகவிடவும். வெந்ததற்கு அடையாளம் எண்ணை மேலே மிதக்கும். தீயின் அள‌வை குறைத்து வைக்கவும்.

* அரிசியை 20 நிமிடம் முன்பே ஊறவைத்து விடவும் ஊறவைத்த அரிசியை வடிக்கவும். உலை கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணையும், எலுமிச்சை பழமும் பிழியவும்.

* வெந்ததும் நல்ல பதமாக பார்த்து ஒவ்வொன்றாக முக்கால் பதத்தில் வடிக்க வேண்டும். உடனே தீயை குறைத்து கிரேவியில் கொட்டவும்.

* கிரேவியையும் அரிசியும் நன்கு சேருமாறு கிளறி சமப்படுத்தி மூடி தம் போடவும்.

* ஐந்து நிமிடம் கழித்து நல்ல ஒரு முறை கிளறி மூடி வைக்கவும். விரும்புபவர்கள் கலரை தண்ணீரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.

* அதன் பிறகு இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு மறுபடியும் 15 நிமிடம் தம்மில் விடவும். சுவையான ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி தயார்.

Related Posts

Leave a Comment