நேரடியாக பைனலுக்கு செல்லும் போட்டியாளர் இவரா? குழப்பத்தில் சக போட்டியாளர்கள்;

by Column Editor

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது இறுதிகட்டத்தை நெருங்க நெருங்க யார் டைட்டில் வின்னராக போகிறார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. யாரும் எதிர்பாராத வகையில் சிபி 12 லட்சம் பணத்த எடுத்துக்கொண்டு வெளியேறிய சம்பவம் ரசிகர்களை ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதனிடையில், இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ காட்சியில் வழக்கம் போல நிரூப் காரசாரமாக வாக்குவாதம் செய்கிறார். இந்நிலையில், பிக்பாஸ் இன்று ஒரு புது ட்விஸ்ட்டை வைத்துள்ளார்.

அதில், உலகத்தோட பார்வையில் தன்னுடைய முகத்தை வெற்றிகரமாக மறைத்திருக்கிறார். ஆனால், அவருடைய உண்மையான முகத்தை கண்டுபிடித்து விட்டோம் அதை துடைத்து சுத்தம் செய்து நேரடியாக இறுதி வாரத்திற்கு அனுப்பலாம் என கூறியிருந்தார்.

அதற்காக இன்றைய நாளில் யாரை தேர்வு செய்து போட்டியாளர்கள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். அதில் வழக்கம் போல நிரூப் எப்படியாவது பைனாலுக்கு போய்விடவேண்டும் என்ற ஆர்வத்தில் மூச்சைபிடித்துக்கொண்டு பேசுகிறார்.

ஆனால், அமீர், என்னடா இத்தனை விளையாட்ட கேமையை தலைகீழா மாத்துர என்று கூறியுள்ளார். அனைத்து போட்டியாளர்களும் யாரை இரண்டாவதாக பைனலுக்கு அனுப்பி வைப்பது என்பது குறித்து தீவிர ஆலோசனை செய்து வருகின்றனர்.

மேலும், ராஜு மற்றும் பிரியங்காவுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது. இதனால், தாமரை அல்லது பாவனி இரண்டாவது பைனலுக்கு செல்ல அதிக வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment