இருவரில் வெளியேறுவது யார் ?… கசப்பான வேலை என்னிடம் வருகிறது என புலம்பும் கமல்

by Lifestyle Editor

நேரடியாக மூன்று போட்டியாளர்களை பார்வையாளர்களே காப்பாற்றும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 91வது நாளை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களே நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் யார் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்ற பரபரப்பு அனைவரிடமும் உள்ளது. அதனால் பார்வையாளர்கள் மிகவும் ஆர்வமாக நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.

அதேநேரம் இந்த வாரம் நாமினேஷில் மொத்தம் உள்ள 8 போட்டியாளர்களும் உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வழக்கம்போல் குறைந்த வாக்குகள் அடிப்படையில் ஒருவர் வெளியேற்றப்பட உள்ள நிலையில் அது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கின் மூலம் அமீர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மீதமுள்ள போட்டியாளர்கள் யார் யார் காப்பாற்றப்பட உள்ளனர் என்பது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பார்வையாளர்களே போட்டியாளர்களை நேரடியாக காப்பாற்றுகின்றனர். முதலில் பேசும் ஒருவார், ரொம்ப நல்ல விளையாடுறாங்க, எதாவது என்றால் யோசிக்காமல் பேசிவிடுகிறார். ஒன்றுமே தெரியாத நபர் என்று பிரியங்கா என்கிறார். அதேபோன்று நிரூப்பும் நன்றாக கேம் விளையாடுகிறார் எனக் கூறி இருவரை அந்த நபர் காப்பாற்றுகிறார்.

இதையடுத்து பேசும் நபர், தாமரைச்செல்வியை காப்பாற்றுகிறேன் என்கிறார். மொத்தமுள்ள 7 பேரில் 5 பேர் காப்பாற்றப்பட்ட நிலையில் மீதமுள்ள சிபி மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவரில் யார் வெளியேற உள்ளார் என்ற பதற்றத்துடன் காட்சிகள் காட்டப்படுகிறது. கடைசியாக பேசும் கமல், கசப்பான வேலை செய்வது என்னிடம்தான் வருகிறது. கார்டை உள்ளே வைத்துவிட்டேன். போய் கொண்டு வருகிறேன் என்று சொல்லும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment