இந்திய அணியை தாங்கி நிற்கும் ராகுல்.. தோனியின் அறிவுரை கோலியிடம் பலிக்குமா?

by Lifestyle Editor

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது முதலில் 3 டெஸ்ட் போட்டிகளை விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டியில் அபார வெற்றியை இந்திய அணி பதிவு செய்திருந்தது.

இதனிடையில் 2வது டெஸ்ட் போட்டியை வென்று முதல் முறையாக தென் ஆப்பிரிக்க மண்ணில் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. இந்திய அணியை பொறுத்தவரையில் ராகுலில் அபார ஆட்டமும், இந்தியாவின் அபார பந்துவீச்சும், தான் தோல்வி பாதையில் இருந்து காப்பாற்றியது.

மற்ற பேட்ஸ்மேன்களான, புஜாரா, கோலி, ரஹானே சொற்ற ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார்கள். அனைத்து போட்டியிலும் ராகுலே இந்திய அணியை காப்பாற்ற முடியாது மற்ற வீரர்களின் பேட்டிங்கும் அவசியம்.

தோனி கூட அடிக்கடி பேட்டியில் தெரிவிப்பார், ஒரு போட்டியில் வென்றால் , நமது அணியில் உள்ள குறைகள் எல்லாம் கார்ப்பேட்டுக்கு அடியில் மறைந்துவிடாது.

நாம் செய்த தவறை திருத்தி கொண்டால் தான், அந்த வெற்றி தொடர்ந்து நிலைக்கும் எனக்கூறுவார். அவர் கூறியதைபோல இந்திய அணி மிதப்பில் இல்லாமல் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்துவது கட்டாயம். இனி வரும் போட்டிகளை பொறுத்தே இந்திய அணியின் தேர்வுக்குழு செயல்படும்.

Related Posts

Leave a Comment