உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ பட டப்பிங் பணிகளைத் துவங்கிய ஆரி!

by Column Editor

நடிகர் ஆரி நெஞ்சுக்கு நீதி படத்தின் டப்பிங் பணிகளைத் துவங்கியுள்ளார்.

அனுபவ் சின்ஹா இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான ‘ஆர்டிகிள் 15’ திரைப்படம் தற்போது தமிழில் நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. உதயநிதி நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தை போனி கபூரின் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. திப்பு நினன் தாமஸ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். நடிகை தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், இளவரசு, மயில்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நடிகர் ஆரி இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஆரி படத்தில் தனது பகுதிக்கான டப்பிங்கைத் துவங்கியுள்ளார். அந்தப் புகைப்படங்களை ஆரி தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். இதற்கிடையில் ஆரி அலேகா , பகவான் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

Related Posts

Leave a Comment