வெளிநாட்டு பராமரிப்பு பணியாளர்களுக்கு குடிவரவு விதிகள் தற்காலிகமாக தளர்த்தப்படும்: பிரித்தானிய அரசாங்கம்!

by Column Editor

பராமரிப்பு நிலையங்களில் ஊழியர்களை பணியமர்த்தும் முயற்சியில், வெளிநாட்டு பராமரிப்பு பணியாளர்களுக்கு குடிவரவு விதிகள் தற்காலிகமாக தளர்த்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்கமைய சமூகப் பாதுகாப்புப் பணியாளர்கள், பராமரிப்பு உதவியாளர்கள் மற்றும் வீட்டுப் பராமரிப்புப் பணியாளர்கள் 12 மாத காலத்திற்கு உடல்நலம் மற்றும் பராமரிப்பு விசாவிற்குத் தகுதி பெறுவார்கள்.

இதன் மூலம் பணியாளர்களில் உள்ள இடைவெளிகளை எளிதாக நிரப்ப முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரெக்ஸிட்டிற்குப் பிறகு பணியாளர்களை பணியமர்த்துதல் மற்றும் வைத்திருப்பதில் பராமரிப்பு துறை , கடுமையான மற்றும் அதிகரித்து வரும் சிக்கல்களை எதிர்கொண்ட எச்சரிக்கைகளைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பற்றாக்குறையாக உள்ள இடங்களில் பராமரிப்பு பணியாளர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இது புலம்பெயர்ந்தோர் பற்றாக்குறை உள்ள வேலைகளை நிரப்ப வேலை விசாவைப் பெற உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்காலிக நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுகாதார மற்றும் சமூக பராமரிப்பு திணைக்களம், குறைந்தபட்சம் 12 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும். அதன் பிறகு, ஏற்பாடுகள் மறுபரிசீலனை செய்யப்படும் என்று திணைக்களம் மேலும் கூறியது.

Related Posts

Leave a Comment