அருண் விஜயின் ‘யானை’ பட டப்பிங்கை நிறைவு செய்த ப்ரியா பவானி ஷங்கர்!

by Column Editor

நடிகை ப்ரியா பவானி ஷங்கர் யானை படத்திற்கான டப்பிங்கை முடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் யானை திரைப்படம் உருவாகி வருகிறது. அருண் விஜய்க்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.இந்தப் படத்தை டிரம்ஸ்டிக் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் இப்படம், ஹரியின் வழக்கமான படங்கள் போன்றே ஆக்ஷன் அதிரடியில் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், ராதிகா யோகிபாபு, கே.ஜி.எப். பட வில்லன் ராமச்சந்திர ராஜு, தலைவாசல் விஜய், மூத்த நடிகர் ராஜேஷ், இமான் அண்ணாச்சி, ‘குக் வித் கோமாளி’ புகழ், அபிராமி அம்மு உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தற்போது ப்ரியா பவானி ஷங்கர் யானை படத்திற்கான டப்பிங்கை நிறைவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். “யானை படத்தின் டப்பிங் முடிந்துவிட்டது, ஒட்டுமொத்த டீமுக்கு ஒரு இனிமையான அனுபவத்தை கொடுத்ததற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment