பொங்கல் பரிசு : அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு ; முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

by Column Editor

பொங்கலை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகிற 2022ஆம் ஆண்டு தை பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இத்தொகுப்பில் பொங்கலுக்கு தேவையான பச்சரிசி ,வெல்லம் ,முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும் , பண்டிகை கால சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் ,கடுகு, சீரகம், மிளகு, கடலைப்பருப்பு ,உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகியவை பொருட்களும் அடங்கிய துணிப்பை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது 2,15,48,060 குடும்பங்களுக்கு மொத்தம் ஆயிரத்து 88 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்றும் முதல்வர் தனது ஆணையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment