50 கோடி கிளப்பில் இணைந்த துல்கர் சல்மானின் ‘குரூப்’ திரைப்படம்!

by Column Editor

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘குரூப்’ திரைப்படம் 50 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.

மலையாளம், தமிழ், இந்தி என மூன்று மொழிகளிலும் பிசியான நடிகராக வலம் வருகிறார் துல்கர் சல்மான். தமிழில் இவர் நடித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குரூப்’‌. இந்தப் படத்தை ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். சுகுமார குரூப்பின் வாழ்க்கையை மையமாகக் வைத்து இப்படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் குரூப் திரைப்படம் இந்தியா முழுவதும் 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பை அடுத்து துல்கர் மிகவும் உற்சாகத்தில் உள்ளார்.

கொரோனா இரண்டாவது அலைக்குப் பின்னர் அதிக வசூல் செய்த படமாக குரூப் படம் அமைத்துள்ளது. தற்போது குரூப் திரைப்படம் 50 கோடி வசூலைத் தாண்டியுள்ளது. இதை துல்கரே அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment