வேற லெவல் நடிகை ஜோதிகாவின் படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!!

by Column Editor

நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான ‘காற்றின் மொழி’ திரைப்படத்திற்கு சிறப்பு அங்கீகாரத்தை கிடைத்துள்ளது. இது குறித்த தகவல் தற்போது வெளியாக, ரசிகர்கள் அவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான ‘காற்றின் மொழி’ திரைப்படத்திற்கு சிறப்பு அங்கீகாரத்தை கிடைத்துள்ளது. இது குறித்த தகவல் தற்போது வெளியாக, ரசிகர்கள் அவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

நடிகை ஜோதிகா கடந்த 2015 ஆம் ஆண்டு ’36 வயதினிலே’ படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுக்க தொடங்கிய பின்னர், அதிகப்படியாக பெண்களை மையமாக வைத்து உருவாக்கப்படும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் குடும்பத்தினரால் திறமை இல்லாத பெண்ணாக பார்க்கப்படும் ஜோதிகா, அவரது திறமையை வெளிக்காட்டி எப்படி தன்னை ஒரு தைரியமான பெண்ணாக வெளிக்காட்டி கொள்கிறார் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ‘காற்றின் மொழி’. 2018 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ஜோதிகா ஒரு ஆர்.ஜே -வாக நடித்திருப்பார்.
பாலிவுட்டில் நடிகை வித்யா பாலன் நடிப்பில் வெளியான, ‘Tumhari Sulu ‘ என்கிற படத்தின் ரீமேக்காக இப்படம் வெளியானது. இந்தப் படத்தில் தன்னுடைய தனித்துவமான நடிப்பில் அசத்தியிருந்தார் ஜோதிகா. இந்நிலையில் இந்தபடத்திற்கு தான் தற்போது சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
உலகின் மிகப்பெரிய வர்த்தக கண்காட்சி, துபாயில் துவங்க உள்ளது. இதில் கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் பங்கேற்கவுள்ளனர். இந்தியாவும் தனது தொழில் துறை, தகவல் தொழில்நுட்பம், சேவை துறை மற்றும் பிற துறைகளை விளம்பரப்படுத்தும் இந்நிகழ்ச்சியில், கலாச்சாரம் மற்றும் சினிமா உட்பட பெரிய அளவில் பங்கேற்பு செய்ய உள்ளது. இந்த விழாவில்தான் தற்போது நடிகை ஜோதிகா நடித்துள்ள ‘காற்றின் மொழி’ திரைப்படம் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜோதிகாவுக்கு ஜோடியாக நடிகர் விதார்த் நடித்திருந்தார். லட்சுமி மஞ்சு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த அக்டோபர் மாதம் நடிகை ஜோதிகாவின் 50வது திரைப்படமாக உருவாகி இருந்த ‘உடன்பிறப்பே’ திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது.அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படத்திற்கு, கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. இந்தப்படத்தில் ஜோதிகாவுக்கு அண்ணனாக சசிகுமாரும், கணவராக சமுத்திரக்கனியும் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தை இ.ரா சரவணன் இயக்கியிருந்தார்.

Related Posts

Leave a Comment