21 ஆண்டுகளுக்கு பின்னர் பூமியை தாக்கிய சூரிய புயல்..!

by Editor News

கடந்த 2003ம் ஆண்டு வந்த சூரியப்புயலுக்கு பின் தற்போது 21 ஆண்டுகளுக்கு பின்னர் சூரியப்புயல் பூமியை தாக்கி உள்ளது.

கடந்த 2003ஆம் ஆண்டில் இப்படி ஒரு சக்திவாய்ந்த சூரிய புயல் பூமியை தாக்கிய போது ஸ்வீடன் முழுவதும் மின்தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, தென் ஆப்ரிக்காவிலும் மின்சார உள் கட்டமைப்பு சேதமடைந்ததாக சொல்கின்றனர். இந்த சூரியப்புயலால் சமீபத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து வானில் பல வண்ணங்கள் தோற்றியதுபோல வீடியோக்கள் பரவி இருந்தன.

அந்த வகையில் இம்முறை சூரிய புயலால் அமெரிக்கா அதிக பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இனிவரும் நாட்களில் மிகப்பெரிய சூரிய புயல் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் வரலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதுபோன்ற சூரியப்புயலுக்கு மக்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

Related Posts

Leave a Comment