3 மாதம் சூரியஒளி வராததால் செயற்கை சூரியனை உருவாக்கிய கிராமம்..

by Editor News

3 மாதங்கள் சூரிய ஒளி கிடைக்காததால் குளிரில் இருந்து தங்களை பாதுகாத்துகொள்ள மறையாத சூரியனை உருவாக்கி சாதனை படைத்துள்ள கிராமம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சூரிய உதித்தல் என்பது அனைவருக்கும் தேவைப்பட்ட ஒரு விஷயமாகும். அதிக குளிரான நேரங்களில் சூரியன் உதித்தால் தான் காலநிலையை சமநிலைபடுத்த முடியும்.

ஆனால் இத்தாலி நாட்டில் உள்ள விக்னெல்லா கிராமத்தில் நவம்பர் 11 முதல் பிப்ரவரி 2 ஆம் தேதிவரையில் சூரிய ஒளி மிக மிக குறைவாகவே இருக்கும்.

இந்த காரணத்தினால் அங்கு குடியமர்ந்த மக்கள் 2005ம் ஆண்டு சுமார் ரூ.1 கோடி திரட்டப்பட்டு, பின்னர் ஊர் எதிரே உள்ள மலையில் பிரமாண்ட கண்ணாடி அமைக்கும் பணி தொடங்கியது.

நவம்பர் 2006ல், கிராம மக்கள் மலையின் மேல் 40 சதுர மீட்டர் கண்ணாடியை நிறுவினர். அதன் எடை 1.1 டன். இது 1100 மீட்டர் உயரத்தில் நிறுவப்பட்டது.

இதனால் குறைந்த அளவு சூரிய ஒளி உயரமான இடத்தில் உள்ள கண்ணாடி மீது படும்போது அது ஒளியை எதிரொளிக்கும். அதன் அடிப்படையில் 2006 ஆம் ஆண்டு விக்னெல்லா கிராமம் முழுமையாக சூரிய ஒளியை பெறத் தொடங்கியது.

சூரிய ஒளியை பெறுவதற்காக இந்த கிராமம் செய்த முயற்சி பல நாடுகளில் பேசும் பொருளாகியது.

Related Posts

Leave a Comment