கேரட் பட்டாணி சாதம்..

by Lifestyle Editor

தேவையான பொருட்கள்:

1 கப் அரிசி,
1/2 கப் மஞ்சள்,
பட்டாணி,
100 கி கேரட் ,
2 பெரிய வெங்காயம்,
5 தக்காளி,
2 பச்சை மிளகாய்,
1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,
1/2 டீஸ்பூன் சோம்பு,
உப்பு தேவையான அளவு,
நல்லெண்ணெய் தேவையான அளவு,
1 டீஸ்பூன் பிரியாணி மசாலா,
1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்,
1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்,
புதினா, கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை:

முதலில் அரிசியை நன்கு கழுவி விட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு ஊற வைத்து கொள்ளவும். பட்டாணியை இரவு முழுவதும் ஊற வைத்து கொள்ளவும். ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சோம்பு சேர்த்து தாளிக்கவும். பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் கறிவேப்பிலை, புதினா சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

இதன் பச்சை வாசனை போனதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்‌. தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், பிரியாணி தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பின் ஊறவைத்த பட்டாணி, நறுக்கிய கேரட் சேர்த்து வதக்கவும். பின் ஊறவைத்த அரிசியை தண்ணீர் வடிந்து விட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி குக்கரை மூடி 2 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான கேரட் பட்டாணி சாதம் ரெடி.

Related Posts

Leave a Comment