‘சிங்கம் 4’ பற்றி இயக்குனர் ஹரி கொடுத்த அப்டேட்..

by Lifestyle Editor

கமர்ஷியல் படங்களை இயக்குவதில் கில்லாடி இயக்குனராக திகழ்ந்து வருபவர் ஹரி. இவர் இயக்கத்தில் வெளிவந்த சாமி, சிங்கம், ஆறு, வேல், பூஜை, தாமிரபரணி போன்ற படங்கள் சக்கைப்போடு போட்டன. அடுத்ததாக் இயக்குனர் ஹரி இயக்கத்தில் ரத்னம் படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் விஷால் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார். ரத்னம் படம் வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.

இயக்குனர் ஹரி – சூர்யா காம்போவிற்கு எப்பவுமே தனி மவுசு உண்டு. முதலில் வேல், ஆறு போன்ற படங்களில் பணியாற்றிய இவர், அதன்பின்னர் சிங்கம் என்கிற மாஸ் ஹிட் படத்தை கொடுத்தனர். அதில் துரை சிங்கம் எனும் போலீஸ் அதிகாரி கேரக்டரில் அசத்தலாக நடித்து மக்கள் மத்தியில் ஒரு மாஸ் ஹீரோவாக உருவெடுத்தார் சூர்யா. சிங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் பாகமும் உருவானது.

இதில் சிங்கம் இரண்டாம் பாகம் ஹிட் அடித்தாலும், மூன்றாம் பாகம் பெரியளவில் சோபிக்கவில்லை. இதனால் சூர்யாவும் சிங்கம் மோடில் இருந்து வெளியே வந்துவிட்டார். அதன்பின்னர் ஹரியும் சூர்யாவும் அருவா என்கிற படத்தில் இணைந்து பணியாற்றுவதாக இருந்தது. அப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ஷூட்டிங் தொடங்க இருந்த சமயத்தில் கொரோனா லாக்டவுன் போடப்பட்டதால் அப்படத்தை அப்படியே டிராப் செய்துவிட்டனர்.

இந்த நிலையில், சிங்கம் 4-ம் பாகம் பற்றி சமீபத்திய பேட்டியில் பேசி இருக்கிறார் ஹரி. அதில் அவர் கூறியதாவது : “நான் எங்கு சென்றாலும் சிங்கம் 4 பற்றி கேட்கிறார்கள். அது ஹாட்ரிக் ஹிட் அடித்த படம் என்பதால் அடுத்த பாகத்திற்கு அதிக உழைப்பு தேவைப்படுகிறது. எனக்கும் சூர்யாவுக்கும் இடையே எந்தவித பிரச்சனையும் இல்லை. சிங்கம் 4 உருவாவது பற்றி காலம் தான் பதில் சொல்லும்” என கூறி இருக்கிறார் இயக்குனர் ஹரி.

Related Posts

Leave a Comment