சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தய பிரித்தானிய வேல்ஸ் இளவரசி கேட்!

by Lifestyle Editor

பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் பொது வெளியில் தோன்றி, சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பிரித்தானிய வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன், வயிற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதன் பின்னர், பொதுவெளியில் தோன்றாமை பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

இதனைதொடர்ந்து அவர் ஓய்வெடுத்து வருவதாகவும், விரைவில் பொது வெளியில் தோன்றுவார் எனவும் செய்திகள் வெளியாகின.

எனினும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு வேல்ஸ் இளவரசி பொதுவெளியில் தோன்றாமையினால் பல வதந்திகள் எழுந்தன.

அத்துடன் சமீபத்தில் அன்னையர் தினத்தில் இளவரசர் வில்லியம் தவிர்த்து, குழந்தைகளுடன் கேட் மிடில்டன் இருக்கும் புகைப்படம் ஒன்றை கென்சிங்டன் அரண்மனை வெளியிட்டது.

இந்தப் புகைப்படமும் பொது வெளியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் இளவரசர் வில்லியமுடன் பண்ணை கடை ஒன்றுக்கு சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில், இளவரசி கேட் மிடில்டன் மற்றும் இளவரசர் வில்லியம் விண்ட்சர் இருவரும் அடிலைடு காட்டேஜ் அருகில் உள்ள பண்ணைக் கடைக்கு சென்றுள்ளனர்.

இதற்கு முன்னதாக, அவர்களது குழந்தைகள் கலந்து கொண்ட விளையாட்டு நிகழ்ச்சியிலும் அவர்கள் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment