200 கோடியை நெருங்கும் மஞ்சும்மல் பாய்ஸ்..

by Lifestyle Editor

மலையாளத்தில் வெளிவந்து இன்று உலகளவில் வசூலை வாரி குறித்துவகொண்டிருக்கும் திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். மலையாள இயக்குனரான சிதம்பரன் இப்படத்தை இயக்கியிருந்தார்.

குணா குகையில் கேரளாவை சேர்ந்த நண்பர்களுக்கு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, இப்படத்தை எடுத்துள்ளார். இப்படத்தின் வெற்றிக்கு மிகமுக்கியமான காரணமாக இருந்த குணா படத்தின் கண்மணி அன்போடு காதல் பாடல் தற்போது படுவைரலாகி வருகிறது.

கேரளாவை விட தமிழகத்தில் அதிகமாக கொண்டாடப்பட்டு வரும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் இதுவரை உலகளவில் கடந்த சில தினங்களுக்கு முன் தான் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த நிலையில், இப்படம் தற்போது ரூ. 175 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்து Industry Hit கொடுத்துள்ளது. இதன்மூலம் உலகளவில் அதிகம் வசூல் செய்த மலையாள திரைப்படமாகவும் மஞ்சும்மல் பாய்ஸ் சாதனை படைத்துள்ளது.

இன்னும் சில நாட்களில் ரூ. 200 கோடியை இப்படம் தாண்டி விடும் என சொல்லப்படுகிறது.

Related Posts

Leave a Comment