40 ஆண்டுகளாக சினிமாவில் நடித்தவர்…மதுரை மோகன் காலமானார்..

by Lifestyle Editor

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வந்தவர் மதுரை மோகன். பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள இவருக்கு முண்டாசுப்பட்டி திரைப்படம் தான் அடையாளம் கொடுத்தது. இதையடுத்து அண்மையில் வெளிவந்த வீரன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார் மோகன்.

மதுரையை சேர்ந்த இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் படங்களிலும் நடிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில், இன்று காலை அவர் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்துள்ளார். அவரின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் மதுரை மோகனின் மறைவுக்கு இறங்கல் தெரிவித்து நடிகர் காளி வெங்கட் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது : “ஐயா நடிகர் மதுரை மோகன் அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார் ஆழ்ந்த இரங்கலும் வருத்தமும். ஏறத்தாழ 40 ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்படாத நடிகராக வலம் வந்தவரை “முண்டாசுப்பட்டி” படத்தின்மூலம் வாய்ப்பளித்த இயக்குனர் ராம்குமார் அவர்களுக்கும் “வீரன்” பட இயக்குனர் சரவண் அவர்களுக்கும் மற்றும் ஐயாவுக்கு வாய்ப்பளித்த அனைத்து இயக்குனர்களையும் இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment