தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 3ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்

by Lifestyle Editor

ஆண்டுதோறும் குழந்தைகள் போலியோ நோயால் பாதிக்கப்படாமல் இருக்க போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒன்று முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் நிலையில், இதில் லட்சக்கணக்கான குழந்தைகள் பயன் அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் அடுத்த மாதம் 3ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் | என 43,051 இடங்களில் காலை 7 மணி முதல் 5 மணி வரை முகாம் நடைபெற உள்ளது.

Related Posts

Leave a Comment